திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் இன்று முதல் அமல்

0 3993

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் இன்று முதல் புதிய அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து வரும் 28-ந்தேதி முதல் அபராத தொகை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் இன்று முதலே அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி போதையில் வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments