பயணிகள் தங்கும் அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர்..!

0 2650

தீபாவளியன்று விரைவு ரயிலில் கர்ப்பிணி பெண் பயணிக்கு, பிரசவம் பார்த்த ரயில்வே பெண் காவலருக்கு, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மங்களூரிலிருந்து சென்னை சென்டரல் வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயிலில், திருப்பத்தூர் ரயில் நிலை அதிகாரி அஸ்வின் குமாருடன், அவருடைய நிறைமாத கர்ப்பிணி மனைவி சாந்தினியும் பயணம் செய்துள்ளார்.

பயணத்தின்போது, பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, ரயில் அரக்கோணம் ரயில்நிலைய நடைமேடைக்கு வந்தபோது, அங்கு பணியில் இருந்த பரமேஸ்வரி என்ற தலைமைக்காவலர் துரிதமாக செயல்பட்டு, சாந்தினியை பயணிகள் தங்கும் அறைக்கு அழைத்துச்சென்றுள்ளார். 

சிறிது நேரத்தில் அங்கேயே சாந்தினிக்கு ஆண்குழந்தை பிறந்த நிலையில், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments