பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு - கடனை திருப்பிக் கேட்ட நபரை சரமாரியாக தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்..!

0 4382

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு மீனவ கிராமத்தில், கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நபரை சரமாரியாக தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரசு பேருந்து ஓட்டுநரான சசிக்குமாருக்கும், தேவதாஸ் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை தேவதாஸ் வீட்டுக்கு தனது மனைவியுடன் சென்ற சசிக்குமார், தேவதாஸை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார்.

இதனைக் கண்ட தேவதாஸின் மனைவி தடுக்க வந்த நிலையில், இரு தரப்பை சேர்ந்தவர்களும் கட்டிப் புரண்டு  தாக்கிக் கொண்டனர்.

இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments