அருணாசலப்பிரதேசம் - 2 கடைகளில் தீப் பிடித்த நிலையில் மளமளவென பரவி 700 கடைகள் நாசம்.!

0 3063

அருணாசலப்பிரதேச மாநிலத்தில் இன்று நேரிட்ட பயங்கர தீ விபத்தில், 700 கடைகள் எரிந்து நாசமாகின. தலைநகர் இடாநகரிலுள்ள நாகர்லகன் பகுதியில் இன்று காலை திடீரென தீ விபத்து நிகழ்ந்தது.

2 கடைகளுக்கு பற்றிய தீயை கட்டுப்படுத்த, தீயணைப்புப்படையினரால் முடியாததால், மளமளவென வேகமாக பரவியது.

அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் நேரிடவில்லை.

விபத்துக்கான காரணம் உறுதியாத நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments