அரசு மருத்துவமனையில் புகுந்து பெயிண்டர் வெட்டிக் கொலை.. 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை..!

0 2612

சேலம் மாவட்டம் மேட்டூரில் அரசு மருத்துவமனையில் புகுந்து பெயின்டரை வெட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொட்டில் பட்டியைச் சேர்ந்த ரகு என்கிற ரகுநாதனுக்கும்,  அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன், நாட்டாமங்கலம் பிரகாஷ் மற்றும் மூர்த்தி ஆகியோருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த  ரகு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் மருத்துவமனை வளாகத்தில் நுழைந்து ரகுவை சரமாரியாக வெட்டியும் கழுத்தை அறுத்தும் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments