மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!

0 2863

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, அரசுப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவெண்ணெய்நல்லூரில் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் கலியமூர்த்திக்கு, சங்கரன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். வேலை வாங்கித் தருவதாக, கலியமூர்த்தி
மூலம் 58 பேரிடம் 94 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை சங்கரன் வாங்கியதாக கூறப்படுகிறது.

2020ஆம் ஆண்டு கலியமூர்த்தி உயிரிழந்ததையடுத்து, வேலை வராததால் பணம் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர்.

24 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மட்டுமே திருப்பிக் கொடுத்த சங்கரன் மீது, ஏமாற்றும் நோக்கம், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments