காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் பலி விபத்தா? அல்லது சதியா? என போலீஸ் தீவிர விசாரணை

0 2768

கோயம்புத்தூர் உக்கடத்தில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அதிகாலை மாருதி 800 காரில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது.

இதில் கார் இரண்டாக உடைந்து அதில் இருந்தவர் பலியான நிலையில், பாதைகளை அடைத்து அப்பகுதியை போலீசார் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி, செய்தியாளர்களை சந்தித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments