''கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து துறைரீதியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது'' - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

0 2259
''கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து துறைரீதியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது'' - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

தமிழக மீனவர் மீது இந்தியக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து துறைரீதியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே, முழுவிவரம் தெரியவரும் என்றும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் பேட்டியளித்த அவர், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவருக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார்.

மேலும், ராமேஸ்வரம் கடற்பாசி பூங்காவிற்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் என்றும், 97 கோடி ரூபாயில் சர்வதேச தரத்தில் காசிமேடு துறைமுகம் மேம்படுத்தப்படும் என்றும் எல்.முருகன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments