மதுபோதையில் ஆற்றுப்பால விளிம்பில் படுத்திருந்த நபரை மீட்ட காவலர்..!

0 3134

கடலூர் அருகே, மதுபோதையில் தென்பெண்ணை ஆற்றுப்பால விளிம்பில் படுத்திருந்த நபரை, காவலர் ஒருவர் மீட்ட காட்சி வெளியாகியுள்ளது.

ஆல்பேட்டை பகுதியில் தென்பெண்ணை ஆற்று பாலத்தின் மீது, மதுபோதையில் ஒருவர் நேற்றிரவு படுத்திருந்தார்.

அவ்வழியே சென்ற காவலர் ராஜதீபன், உடனடியாக சுதாரித்து, அவரை மீட்டு, ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

பாலத்துக்கும் ஆற்றுக்கும் இடையேயான தூரம் 70 அடி ஆகும்.

சிறிது தவறினாலும், அவர் பாலத்திலிருந்து கீழே விழுந்து அசம்பாவிதம் நேரிட்டிருக்கலாம் என்பதால், காவலர் ராஜதீபனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments