மந்திரக் காதலனை ஏவி கணவனை கொன்று வீடியோ காலில் ரசித்த தந்திரக்காரி..!

0 5078

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காதலனை ஏவி காதலித்து திருமணம் செய்த கணவனை கொலை செய்ய வைத்து அதனை வீடியோ காலில் பார்த்து ரசித்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஜி. நடுப்பட்டியை சேர்ந்த விஜயசாந்தியும், சந்தைப்பேட்டையை சேர்ந்த நவீன் குமாரும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஆறு வயதில் மகனும் மூன்று வயதில் மகளும் உள்ளநிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக விஜயசாந்தி கணவருடன் கோபித்துக் கொண்டு வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள சாலையூர்- நால்ரோட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு தனது குழந்தைகளுடன் சென்றுள்ளார்.

கடந்த 2 வருடமாக மனைவியை பிரிந்து வாழ்ந்துவந்த நவீன்குமார், கோடாங்கிப்பட்டி பகுதியில் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடப்பதாக கிராம மக்கள் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். வேடசந்தூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையுன்ட நவீன் குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த நவீன் குமாரின் மனைவி விஜய சாந்தி கதறி அழுது கொண்டு ஓடி வந்தார். என் கணவரை எந்த படுபாவியோ கழுத்தறுத்து கொலை செய்துவிட்டான் என்று அழுததை பார்த்த காவல்துறையினர் சந்தேகம் அடைந்து அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து துருவித் துருவி விசாரித்தனர் . விஜயசாந்தியிடம் நடத்திய விசாரணையில் நவீன் குமார் கொலைக்கான மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது.

கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த விஜயசாந்தி, கணவருடனான காதல் கசந்ததால் உருவான குடும்பப் பிரச்சனையை போக்குவதற்கு குறி சொல்லும் சாமியார் சிவாவிடம் சென்றபோது இருவருக்கும் விபரீத காதல் ஏற்பட்டுள்ளது.

பிரிந்து வாழ்ந்த மனைவி விஜயசாந்தியை பார்க்க வந்த போதெல்லாம் கணவர் நவீன்குமார் சண்டையிட்டு செல்வதை வாடிக்கையாக்கியதால் கணவர் மீது தீராத கோபம் கொண்டு அவரை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு மந்திரக்காதலன் சிவாவை ஏவியுள்ளார்.

அதன் படி சிவா தன்னை லோடு மேன் போல மாற்றிக் கொண்டு கணவன் நவீன் குமாருடன் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். பின்னர் பழக்கத்தை பயன்படுத்தி மது அருந்த அழைத்துச் சென்று போதை தலைக்கேறிய நிலையில் கத்தியை எடுத்து நவீன்குமாரின் கழுத்தை கொடூரமாக அறுத்துக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த பின்பு தனது காதலி விஜயசாந்திக்கு போன் செய்து இத்தோடு பிரச்சினை முடிந்து விட்டது என்று கூறியதாகவும், ஆனால் அதை நம்பாத காதலி விஜயசாந்தியிடம் வீடியோ கால் மூலம் , நவீன்குமார் கழுத்தருக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை காண்பிக்க அதனை பார்த்து விஜயசாந்தி ரசித்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து விஜயசாந்தியையும், ஒட்டன்சத்திரத்தில் பதுங்கி இருந்த மந்திரக்காதலன் சிவாவையும் கைது செய்த போலீசார் சிவாவை கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டச் சொல்லி, கொலைக்காக பயன்படுத்திய கத்தியை மீட்டனர்.

மந்திரம் கேட்க சென்ற இடத்தில் மலர்ந்த விபரீத காதலால் தந்திரமாக காதல் கணவனை கொலை செய்து, நாடகமாடிய மனைவி காவல்துறையினரிடம் சிக்கியதால் சிறையில் கம்பி எண்ணி வருகின்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments