நடிகை பார்வதி நாயர் வீட்டில் விலை உயர்ந்த கை கெடிகாரங்கள் உள்ளிட்டவை திருட்டு..!

0 2806

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயர் வீட்டில் விலை உயர்ந்த 2 கை கெடிகாரங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பதாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், ஸ்டெர்லிங் சாலையில் உள்ள வீட்டில் வசிக்கிறார்.

நுங்கம் பாக்கம் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், தமது வீட்டில் 2 ஆண்டாக வேலை பார்த்த நபர் ஒருவர், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு கை கெடிகாரம்,  3 லட்சம் ரூபாய் மதிப்புடைய மற்றொரு கை கடிகாரம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மடிக்கணினி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments