இபிஎஸ்.,ஐ பார்க்க அனுமதி மறுப்பு : சாலை மறியலில் ஈடுபட்ட ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

0 2583

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நேற்று வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கல் கைது செய்யப்பட்டு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி ஜி.கே.வாசனும் அவரது கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments