ஸ்கூட்டர் -ஆட்டோ-பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து.. ஆட்டோவில் பயணம் செய்த இளம்பெண் உயிரிழப்பு..!

0 3321

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் ஸ்கூட்டரில் மோதிய ஆட்டோ மீண்டும் தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திரூர் சாலையில் தாழப்பாடம் பகுதியில் ஸ்கூட்டர் ஓட்டியவர் தனது வாகனத்தை கவனக்குறைவாக சாலையில் இயக்க முயன்ற போது ,எதிரே வந்த ஆட்டோ மோதியது.

இதனால் நிலைதடுமாறிய அந்த ஆட்டோ, எதிரே வந்த தனியார் பேருந்தின் முன் பகுதியில் பயங்கரமாக மோதியது.

அப்போது  ஆட்டோவில் பயணம் செய்த மூன்று பேர் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில் கீழே விழுந்த பெண் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments