திருச்சியில் ஆலய திருப்பணி ஆய்வறிக்கை வழங்க லஞ்சம் வாங்கிய தொல்லியல் துறை பெண் அதிகாரி கைது..!

0 4220

திருச்சியில் ஆலய திருப்பணி ஆய்வறிக்கை வழங்க லஞ்சம் பெற்ற பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

முசிறி வட்டம், குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் திருப்பணிக்காக தமிழக அரசின் மாநில அளவிலான  நிபுனர் குழுவினின் ஆய்வறிக்கை பெறுவதற்காக, கமிட்டி உறுப்பினரும், தொல்லியல்  துறை  வல்லுநருமான மூர்த்தீஸ்வரியை, பரம்பரை டிரஸ்டியான பிச்சுமணி ஐயங்கார் அணுகி உள்ளார்.

அவர் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் அந்த பணத்தை  கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசர் மூர்த்தீஸ்வரியை கையும் களவுமாக பிடித்தனர்.

மூர்த்தீஸ்வரி காரில் வைத்திருந்த 5 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்தனர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments