கண் கருவிழி சரிபார்ப்பு மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

0 3501

கண் கருவிழி சரிபார்ப்பு மூலமாக, நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்கும் திட்டத்தை, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருவல்லிக்கேணி பகுதி நடுக்குப்பத்திலுள்ள பொது விநியோகத் திட்ட அங்காடியில், இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இத்திட்டம் அரியலூரிலும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் வரவேற்பிற்கேற்ப தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments