ஓடும் ரயில் முன் தள்ளி, கல்லூரி மாணவி சத்யஸ்ரீ படுகொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை..!

0 2778

ரயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட சத்யஸ்ரீ, ஏற்கனவே கொலையாளி சதீசால் மிரட்டப்பட்ட நிலையில், அது குறித்து காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார் ஆவணங்களை பெற்று, சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகிறது.

சத்யஸ்ரீயை தாக்கியது தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் பதிந்த வழக்கு குறித்தும், புனித தோமையர் மலை காவல் நிலையத்தில் அளித்த மற்றொரு புகாரில், சதீசிடம் எழுதி வாங்கி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் குறித்தும் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

மேலும், புழல் சிறையில் அடைக்கப்பட்ட சதீசை காவலில் எடுத்து விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மாம்பலம் காவல் நிலையத்தில் சதீஷ் மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் விவரம் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments