சமைக்கும்போது சிலிண்டர் வாயுக்கசிவால் தீ விபத்து.. 2 குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்..!

0 2391

சேலம் நெத்திமேட்டில் சிலிண்டர் கசிவால் நேரிட்ட தீ விபத்தில், 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.

பெருமாள் கரடு பகுதியில் சுதாகர் என்பவரின் வீட்டின் சமையலறையில் இருந்த சிலிண்டரில், திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சமைக்கும்போது வாயுக்கசிவு ஏற்பட்டதால், உடனடியாக தீப்பற்றியதாக கூறப்படும் நிலையில், அங்கு ஒன்றாக அமர்ந்திருந்த
சுதாகர், அவரது மகள் மற்றும் வீட்டிற்கு வந்த உறவினர்கள் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments