நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதில் தகராறு.. தாயை கொன்று, உடலை வாய்க்காலில் வீசிய மகன்..!

0 2852

உடுமலை அருகே, நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில், பெற்ற தாயை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர்.

சின்னபாப்பனூத்தைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும் அவரது தாயார் பூங்கொடிக்கும் நிலப்பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது.

புதன்கிழமை, நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்ற பூங்கொடி, வீட்டிற்கு திரும்பாததால், அவரது கணவர் போலீசில் புகாரளித்தார்.

சந்தேகத்தின் பேரில் மருமகளிடம் போலீசார் விசாரித்தபோது, தண்ணீர் திறந்து விடும்போது ஏற்பட்ட தகராறில், பூங்கொடியை, சதீஷ்குமார் தண்ணீர் திறந்துவிடும் லிவரால், தலையில் பலமாகத் தாக்கி கொலை செய்து, உடலை வாய்க்காலில் வீசியதாகத் தெரிவித்தார்.

மாமனார் வீட்டில் பதுங்கி இருந்த சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments