கொசஸ்தலை ஆற்றில் குளித்த 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி..!

0 3283
கொசஸ்தலை ஆற்றில் குளித்த 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி..!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மணவூரைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் நிரஞ்சனும், 8ம் வகுப்பு மாணவன் கோகுலும் இன்று பள்ளி விடுமுறை என்பதால் காலையில் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

நெடு நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில், இருவரும் ஆற்றுக்கு சென்றதை அறிந்த பெற்றோர் அங்கு சென்று பார்த்த போது, ஆடைகள் மட்டும் கரையில் இருந்துள்ளன.

உடனடியாக ஆற்றில் இறங்கி இருவரையும் தேடிய அக்கிராம இளைஞர்கள் நிரஞ்சனை சடலமாக மீட்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஆற்று புதை மண்ணில் சிக்கியிருந்த கோகுலின் சடலத்தையும் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments