குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது ஏன்..? தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் விளக்கம்..

0 3403

இமாச்சல பிரதேச தேர்தல் அறிவிப்புடன், குஜராத் சட்டமன்ற தேர்தலை அறிவிக்காதது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

இரு மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் நிறைவு பெறுவதற்கான இடைவெளி 40 நாட்கள் உள்ளதாகவும், குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பதால் குஜராத்திற்கு தேர்தல் தேதி இன்று அறிவிக்கவில்லை என்றும் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், பனிப்பொழிவிற்கு முன்னதாகவே இமாச்சல பிரதேசத்தில் தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments