சென்னை தலைமைச்செயலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி..!

0 3505

சென்னை தலைமைச்செயலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் மாநகராட்சிக்கு குத்தகைக்கு விட்டிருந்த தனது நிலத்தை ஒப்பந்த காலம் முடிந்தும் மாநகராட்சி நிர்வாகம் திரும்ப ஒப்படைக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் விமலா என்பவர் புகார் அளித்திருந்தார். 

நடவடிக்கை எடுக்கப்படாததால் விரக்தி அடைந்த விமலா , 4-ஆம் எண் நுழைவு வாயில் வழியாக  தலைமைச் செயலகத்திற்குள்  நுழைந்து தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைக்க முயன்றார்.

அவர் மீது தண்ணீரை ஊற்றி  மீட்ட போலீசார் விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments