கைக்குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ள கிணற்றில் குதித்த இளம்பெண்.. தாய் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், குழந்தை பலி

0 3094

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, 8 மாத கைக்குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வதற்காக கிணற்றில் குதித்த இளம்பெண் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

அண்ணாபுரம் வடக்குக்காடு பகுதியை சேர்ந்த செல்வக்குமார்- தேன்மொழி தம்பதிக்கு, திருமணமாகி 7 வருடங்களுக்கு பின், ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தேன்மொழி தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். குழந்தை நீரில் மூழ்கி இறந்துவிட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments