ஹிஜாப் விவகாரம்: 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.. கூடுதல் அமர்வுக்கு ஹிஜாப் வழக்கு மாற்றம்!

0 3312

கர்நாடகா மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரும், மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகியோர் தீர்ப்பு அளித்தனர் . இவர்களில் நீதிபதி ஹேமந்த் குப்தா ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பு செல்லுமென்று கூறியுள்ளார்.

மற்றொரு நீதிபதியான சுதான்சு துலியா ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லாது என்று தீர்ப்பளித்து இருக்கிறார். நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்துள்ளதால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை.

இதையடுத்து ஹிஜாப் வழக்கு தலைமை நீதிபதி யு.யு. லலித்தால் அமைக்கப்படும் மிகப்பெரிய அமர்வில் அடுத்து விசாரிக்கப்படும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments