நல்ல சம்பளத்துடன் வெளிநாடு வேலை.. ஆசை காட்டும் மோசடி கும்பல் - டி.ஜி.பி.சைலேந்திர பாபு எச்சரிக்கை

0 2025

நல்ல சம்பளத்துடன் வெளி நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தும் மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாற வேண்டாம் என்று டி.ஜி.பி.சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து டி.ஜி.பி.,வெளியிட்டுள்ள வீடியோவில், தாய்லாந்து, கம்போடியா நாட்டில் பிரபல நிறுவனத்தில், வேலை வாங்கித் தருவதாக தமிழக இளைஞர்களை சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தி உள்ளதாகவும், அரசு உதவியுடன் இந்திய தூதரகம் வாயிலாக அவர்கள் மீட்கப்பட்டு, தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments