காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

0 2801

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று அதிகாலை மூன்றரை மணி அளவில் மேட்டூர் அணை 120 அடியினை எட்டியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு கூடுதலாக தண்ணீர் வருவதை அடுத்து அணையில் இருந்து உபரிநீர் போக்கி கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது.

எனவே இந்த கால்வாய் அமைந்துள்ள தங்கமாபுரி பட்டினம் மற்றும் அண்ணா நகர், பெரியார் நகர் பகுதிகளில் வருவாய்த் துறையினர் நேற்றிரவு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments