அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு சூடு வைத்ததாக புகார்.. சத்துணவு அமைப்பாளர் உள்பட இருவர் மீது குழந்தையின் பெற்றோர் புகார்..!

0 3185
அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு சூடு வைத்ததாக புகார்.. சத்துணவு அமைப்பாளர் உள்பட இருவர் மீது குழந்தையின் பெற்றோர் புகார்..!

தருமபுரி அருகே அங்கன்வாடி மையத்தில் நான்கு வயது குழந்தைக்கு காலில் சூடு வைத்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராமியம்பட்டியை சேர்ந்த சங்கர்-கீர்த்திகா தம்பதியின் 4 வயது மகன், அதே பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் பயின்று வந்தார்.

கடந்த 3ந்தேதி , அங்கன்வாடி மையத்திலிருந்து வீட்டிற்கு வந்த குழந்தையின் காலில் சூடு வைத்த காயம் இருந்ததாக கூறப்படுகின்றது.

அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் சமையலர் உரிய பதிலளிக்காமல் பெற்றோரை மிரட்டியதால், சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சிதலைவரிடம் பெற்றோர் புகாரளித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments