நீர் நிரம்பிய பள்ளத்தில் பயணிகளுடன் கவிழ்ந்த இ-ரிக்சா.. கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற அரசு அதிகாரிகள்..!

0 2664
நீர் நிரம்பிய பள்ளத்தில் பயணிகளுடன் கவிழ்ந்த இ-ரிக்சா.. கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற அரசு அதிகாரிகள்..!

உத்தரபிரதேசத்தில், பயணிகளுடன் சென்ற இ-ரிக்ஷா, சாலை பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில், அவ்வழியாக வந்த அரசு அதிகாரிகள், மக்களுக்கு உதவாமல் சென்றது குறித்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீதாபூர் பகுதியில் பயணிகளுடன் வந்த இ-ரிக் ஷா, சாலையில் இருந்த நீர் நிறைந்த பள்ளத்தை கடக்க முற்பட்டபோது, நிலை தடுமாறி, கவிழ்ந்தது.

விபத்து நேரிட்டபோது, அவ்வழியாக அரசு அதிகாரிகள், போலீசாரின் வாகனங்கள் அணிவகுத்து சென்ற நிலையில், எந்த ஒரு அரசு அதிகாரியும் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ முன்வரவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments