12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவர் தாலிக்கட்டிய வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்ட நபர் கைது...

0 124995

சிதம்பரத்தில் பேருந்து நிலையத்தில் வைத்து பள்ளி மாணவிக்கு, பாலிடெக்னிக் மாணவர் தாலி கட்டும் வீடியோவை, பேஸ்புக்கில் வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

இணையதளத்தில் வீடியோ வைரலான நிலையில், அதை வெளியிட்ட கோவிலாம்பூண்டியை சேர்ந்த பாலாஜி கணேசிடம் மாணவியின் பெற்றோர் தட்டிக் கேட்டபோது, அவர்களை பாலாஜி திட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, மாணவர் மற்றும் மாணவியிடம் போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை 8 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றது. அதன்பின், கவுன்சிலிங்கிற்காக காப்பகத்துக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments