இந்தியா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியின் நிறைவு விழாவில் பாகிஸ்தான் பங்கேற்க இருப்பதாக தகவல்!

0 2990

இந்தியா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியின் நிறைவு விழாவில் பாகிஸ்தான் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நடைபெற்றுவரும் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப் பயிற்சியை இந்தியாவின் தேசிய பாதுகாப்புப் படை நடத்துகிறது.

இதில் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்றுள்ளன. 2-ம் கட்டமாக கடந்த 8-ம் தேதி தொடங்கிய இப்பயிற்சி நாளை மறுநாள் நிறைவு பெறுகிறது.

இந்த நிறைவு விழாவில் கலந்துகொள்ள பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments