தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை -தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

0 2673

தமிழ்நாட்டில் தீபாவளியன்று, கடந்த ஆண்டைப்போலவே, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே, பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த காற்று மாசுத்தன்மை கொண்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என்றும், மருத்துவமனை, வழிபாட்டுத்தலம் மற்றும் அமைதிக்காக்க வேண்டிய பகுதிகளில், பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments