அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பெண், 6 மாத கைக்குழந்தை பலி
சென்னை அமைந்தகரையில், அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில்,சாலையை கடக்க முயன்ற பெண்ணும், அவரது ஆறு மாத கைக்குழந்தையும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
என்.எஸ்.கே.நகரைச் சேர்ந்த பூங்குழலி என்பவர், அண்ணா நினைவு வளையம் அருகே உள்ள தனது கடைக்கு, கணபதி ஹோம பூஜைக்கு செல்வதற்காக, அதிகாலையில் சாலையை கைக்குழந்தையுடன் கடந்துள்ளார்.
அப்போது அதிவேகமாக கேடிஎம் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவருடன் மதுபோதையில் வந்த இளைஞர், இருவர் மீதும் மோதினார்.
Comments