திருவாரூரில் ஜப்பானிய வைரஸ் காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பாதிப்பு..!
திருவாரூரில் ஜப்பானிய வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஜப்பானிஸ் என்செபாலிடிஸ் (Japanese encephalitis) என்ற மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கல்லூரி டீன் ஜோசப் ராஜ் கூறும்போது, சீதோஷண மாற்றத்தால் இதுபோன்ற காய்ச்சல்கள் பரவுவதாகவும், இதுவும் இன்புளுயன்சா வைரஸ் போன்றதுதான் என்றும் தெரிவித்தார்.
காய்ச்சலுக்காக மக்கள் தாங்களாகவே மருத்துவம் பார்த்துக் கொள்ளாமல் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை பெற வந்தால் விரைவில் குணப்படுத்த முடியும் என்றார்.
காய்ச்சலுக்கென்று அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக வார்டில் 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments