தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்!

0 3607

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

நாளை நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

நாளை மறுநாளும் 23 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments