பனங்காட்டுப்படை கட்சித்தலைவர் ராக்கெட் ராஜா கைது..!

0 5931
பனங்காட்டுப்படை கட்சித்தலைவர் ராக்கெட் ராஜா கைது..!

நெல்லை மாவட்டத்தில் பனங்காட்டுப்படை கட்சித்தலைவர் ராக்கெட் ராஜாவை  கொலை வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர்.

மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில்  கடந்த ஜூலை 29ஆம் தேதி தனது வீட்டினருகே படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக இருவர் சரணடைந்த நிலையில் , விசாரணையில் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ராக்கெட் ராஜா வெளிநாடு தப்பிச்செல்லவிருப்பதாக வந்த தகவலையடுத்து திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இம்மாதம் 20ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் எடுத்த போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments