ஆன்மீக கருத்துகளை விட்டுவிட்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் - ஆளுநர் ஆர்.என்.ரவி..

0 3785

திருக்குறளை ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்த்த ஜி.யு.போப், அதிலிருந்த ஆன்மீக கருத்துகளை விட்டுவிட்டு மொழி பெயர்த்துவிட்டதாக தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார்.

குறள் சங்கத்தின் சார்பில் சென்னயில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  நடைபெற்ற திருக்குறள் உலகத்தின் முதல் நூலை வெளியிட்ட அவர், ஜி.யு.போப் பற்றி பேசும் போது எதிர்த்து சத்தம் போடுகிறவர்களால் உண்மையை அழித்துவிட முடியாது என்றார்.

ஆன்மீகம் மற்றும் நீதி சாஸ்திரங்கள் கலந்த திருக்குறளை வெறும் வாழ்க்கை புத்தகமாக காட்ட நினைப்பது ஏற்புடையது இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தொடந்து பேசிய ஆளுநர் தமிழில் சரளமாக பேசுகிற அளவுக்கு தமக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments