துபாயிலிருந்து புதுடெல்லிக்கு கடத்தி வரப்பட்ட 27 கோடி ரூபாய் மதிப்பிலான வைர வாட்ச் பறிமுதல்

0 3115
துபாயிலிருந்து புதுடெல்லிக்கு கடத்தி வரப்பட்ட 27 கோடி ரூபாய் மதிப்பிலான வைர வாட்ச் பறிமுதல்

துபாயிலிருந்து புதுடெல்லிக்கு கடத்தி வரப்பட்ட 27 கோடி ரூபாய் மதிப்பிலான வைர வாட்சை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து வந்த விமானப்பயணியை சோதனையிட்டபோது 7 கைக்கடிகாரங்கள், ஒரு வைர பிரேஸ்லெட் மற்றும் ஒரு 14 ப்ரோ மாடல் ஐ-போன் சிக்கியது. அவற்றுள், ஜாகப் அண்ட் கோ நிறுவனத்தால் 18 காரட் தங்கத்தில், 76 வெள்ளை வைரக்கற்கள் பதித்து தயாரிக்கப்பட்ட வாட்ச் இருந்துள்ளது.

பெருங்கோடீஸ்வரர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்த வாட்சின் மதிப்பு 27 கோடி ரூபாய் எனக்கூறப்படுகிறது. இதுதவிர, 31 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு பியாஜே வாட்சும், 15 லட்ச ரூபாய் மதிப்பிலான தலா 5 ரோலக்ஸ் வாட்ச்களும், பறிமுதல் செய்யப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments