அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.1.86 கோடி சுருட்டிய நபர் கைது..!

0 2691
அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.1.86 கோடி சுருட்டிய நபர் கைது..!

பெரம்பலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1 கோடியே 86 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் துறையூர் சிங்கிளாந்தபுரத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரை பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த மோகன்பாபு கடத்திச் சென்று விட்டதாக அவரது உறவினர் ஒருவர் காவல் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.இது தொடர்பாக, மோகன்பாபு மற்றும் பிரகாஷை அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.

உள்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் இணை செயலாளராக பணிபுரிந்து வருவதாக கூறி நம்ப வைத்த பிரகாஷ், மோகன்பாபுவின் நண்பர்கள்- உறவினர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு பெருமளவில் மோசடி செய்தது தெரியவந்தது.

பிரகாஷ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்த போலீசார், மோகன்பாபு மீது ஆட்கடத்தல் வழக்குப்பதிந்து சிறையிலடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments