அரசு தலைமை அலுவலகத்தில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்.. சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட 12 பேர் உயிரிழப்பு..!

0 4722
அரசு தலைமை அலுவலகத்தில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்.. சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட 12 பேர் உயிரிழப்பு..!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிகழ்த்தப்பட்ட இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.

ஹிரன் மாகாணத்தில் உள்ள பெலேட்வேய்ன் நகரின் அரசு தலைமை அலுவலகத்தில் அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தன.

தாக்குதலில் அந்த மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உள்பட 12 பேர் உயிரிழந்த நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. அல்-ஷபாப் அமைப்பின் முக்கிய தலைவன் அப்துல்லாவை, சோமாலிய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற நிலையில், அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments