பலூன் வியாபாரியை மிரட்டி மாமூல் கேட்ட ரவுடி ஹீலியம் சிலிண்டர் வெடித்து உடல் சிதறி உயிரிழப்பு..!

0 4239

திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் ரவுடி உடல் சிதறி உயிரிழந்தது தொடர்பாக பலூன் விற்றவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவு சத்திரம் பேருந்து நிலையம் அருகே, பயங்கர வெடி சத்தத்துடன் பலூன் விற்பவர்கள் வைத்திருந்த ஹீலியம் சிலிண்டர் வெடித்தது.

பலூன் விற்று வந்த வட மாநிலத்தவர்களிடம் மாட்டு ரவி என்ற ரவுடி மாமுல் கேட்டு மிரட்டியதாகவும், ஹீலியம் சிலிண்டர் அருகே அவர் புகைப்பிடித்தபோது அது வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதில், ரவுடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அளவுக்கதிமாக சிலிண்டரில் ஹீலியம் அடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், பலூன் விற்ற வடமாநிலத்தைச் சேர்ந்த அனார் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments