தீபாவளி ஃபண்டு நடத்தி பண மோசடி செய்த நபர் தலைமறைவு.. பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்!

0 4643

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் தீபாவளி பண்டு நடத்தி பண மோசடி செய்த நபரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாலந்தூரை சேர்ந்த ஜே.பி. ஜோதி, அவரது ஏஜென்சி மூலம் தீபாவளி பண்டு நடத்தி மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தினால், 4 கிராம் தங்கமும், 500 செலுத்தினால் 2 கிராம் தங்கமும், அத்துடன் 40 கிராம் வெள்ளி நாணயம், பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என அறிவித்து ஏராளமான பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளார்.

இதனிடையே மளிகை கடை, ஜே.பி.ஸ்டார் ஏஜென்சியை மூடிவிட்டு ஜோதி தலைமறைவானதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments