மின்துறை தனியார் மயமாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள் கைது!

0 2800

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். 

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்குதலை கண்டித்து காலவரையற்ற போராட்டம் அறிவித்து மின் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின்வெட்டு ஏற்பட்டதை கண்டித்து பொதுமக்களும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐந்தாவது நாளாக நேற்று உப்பளம் சாலையில் உள்ள தலைமை மின் பொறியாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்துறை அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை துணை ராணுவம் மற்றும் போலீசார் திடீரென கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments