எச்சரிக்கைகளில் அலட்சியம் கூடாது.. அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை..!

0 3537

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மூலமாக வரும் எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அரசின் அனைத்து அமைச்சக செயலாளர்களும் கலந்துக் கொண்டனர்.

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி சில பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை பிரதமர் மோடியிடம் தாக்கல் செய்தார். இதையடுத்து எந்த ஒரு பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை வகுக்கும் போதும் இந்தியாவின் நிலைப்பாட்டை கணக்கில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம்  போன்ற முதன்மையான பாதுகாப்பு ஏஜன்சிகள் வழங்கும் தகவல்களை அலட்சியப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.

 தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் குறிப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிகழ்வுகள் நடந்த உள்ளன என்று மோடி அப்போது சுட்டிக் காட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments