மகாத்மா காந்தியடிகளின் 154-வது பிறந்தநாள்: மலர்தூவி தலைவர்கள் மரியாதை.!

0 2416

தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியடிகளின் 154-வது பிறந்தநாளான இன்று, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு வந்த குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் திருவுருவ படத்திற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments