அரசு மகப்பேறு மருத்துமனை வளாகத்தில் ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டதால் பரபரப்பு.!

0 3701

திருவாரூரில் அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் புதுத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரும் விஜயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் கட்டிப் புரண்டு சண்டையிட்டுக் கொண்டதுடன் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாறி மாறி குத்திக் கொண்டனர்.

மகப்பேறு மருத்துவமனை என்பதால் பெண்கள் மட்டுமே இருந்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments