டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் பண மோசடி... தன்னை காப்பாற்றுமாறு பெண் வெளியிட்ட வீடியோ வைரல்!

0 3485

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையத்தைச் சேர்ந்த பிரவீனா அப்பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.

அவரது வாடிக்கையாளரான செட்டிபாளையத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியும், அவரது கணவர் சிவக்குமாரும், பிரவீனாவிடம் டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறி 3 கோடியே 75 ஆயிரம் ரூபாயை பெற்று ஏமாற்றியுள்ளனர்.

பணத்தை திருப்பி கேட்டதற்கு தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்று வரலாம் என அழைத்துச் சென்று தன்னை திருச்சியில் அடைத்து வைத்து, பத்திரங்களில் கையெழுத்து வாங்கியதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் பிரவீனா அழுது வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments