மெர்சிடஸ் பென்ஸின் ரூ.1.55 கோடி மதிப்பிலான புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்..!

0 2866

மெர்சிடஸ் பென்ஸ் கார் நிறுவனம் 1.55 கோடி ரூபாய் மதிப்பில் புதிய எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

EQS 580 என்ற இந்த கார் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட மெர்சிடஸ் பென்ஸின் முதல் எலெக்ட்ரிக் காராகும்.

ஜெர்மனிக்கு வெளியே EQS காரை அசெம்பிள் செய்த ஒரே நாடாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் விற்கப்படும் எலெக்ட்ரிக் கார்களில் அதிகபட்ச விலையை கொண்டுள்ள இக்கார், ஒருமுறை சார்ஜ் செய்தால் 857 கிலோ மீட்டர் செல்லும் எனவும், முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments