மலப்புரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா 6 அலுவலகங்களுக்கு நோட்டீஸ்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவில், சீல் வைக்க நடவடிக்கை..!

0 2637

கேரள மாநிலம் மலப்புரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வின் ஆறு அலுவலகங்களில் காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.

அவர்களுடன் என்.ஐ.ஏ.அதிகாரிகளும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த இடம் சட்டவிரோதமான நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டதாக அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத நடவடிக்கைகள் காரணமாக 5 ஆண்டுகளுக்கு இந்த இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து அனைத்துமாநிலங்களிலும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கேரளா முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments