காபூல் கல்வி மைய குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு..!

0 2559

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கல்வி மையத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் செயல்பட்டு வரும் உயர் கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.

அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் மாணவிகள் உட்பட 32 பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் காயமடைந்தனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments