அரசு மதுக்கடையில் மீதி சில்லரை கேட்ட குடி மகனை தாக்க முயன்ற விற்பனையாளர்

0 2773
அரசு மதுக்கடையில் மீதி சில்லரை கேட்ட குடி மகனை தாக்க முயன்ற விற்பனையாளர்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அரசு மதுபானக் கடையில் மீதி சில்லறை கேட்ட குடிமகனை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்ற விற்பனையாளரின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தீர்த்தபுரம் சாலையில் உள்ள மதுக்கடையில், குடிமகன் ஒருவர் 600 ரூபாய் கொடுத்து, 590 ரூபாய்க்கு மது வாங்கியது போக, மீதம் 10 ரூபாய் சில்லரையை திருப்பிக் கேட்டுள்ளார்.

அப்போது, விற்பனையாளர் செல்வம்,குடிமகனை தாக்க முற்பட்டதை, அங்கிருந்த மற்றொருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். செல்வம் ஏற்கனவே ஆலங்குளம் மதுக்கடையில் வேலை பார்த்த போது மீதி சில்லரை கேட்ட குடிமகனை அடித்தற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments