ஆயுத பூஜை பண்டிகையையொட்டி தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

0 2311

ஆயுத பூஜை விடுமுறையையொட்டி தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பேருந்துகளுடன், 2050 சிறப்பு பேருந்துகளும் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிற முக்கிய நகரிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 1650 சிறப்பு பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து, திண்டிவனம் மார்க்கமாக, புதுச்சேரி,கடலூர் மற்றும் திருவண்ணாமலை செல்லக்கூடிய பேருந்துகளும் , பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் ஓசூர் மற்றும் திருப்பதி செல்லக்கூடிய பேருந்துகளும் , கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, ஈ.சி.ஆர் , திருச்சி , மதுரை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் மற்றும் கோவை திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments